8 வருசமா RCB கேப்டனா இருந்து ஒன்னும் கிழிக்கல..வெட்கமா இல்லையா?? கோலியை கேவலப்படுத்திய கம்பிர்

First Published Nov 9, 2020, 10:15 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றோடு வெளியேறியுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக 8 ஆண்டுகளாக உள்ள விராட் கோலியை, கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்  சாடியுள்ளார்
 

இ சாலா கப் நம்தே’ என்ற கோஷத்துடன் களமிறங்கிய பெங்களூரு அணி இம்முறையும் வெறும் கையுடன் வெளியேறிவிட்டது. இதனால் அந்த அணி கேப்டன் கோலி மீது விமர்சன யார்க்கர்கள் பாயத் தொடங்கியுள்ளன
undefined
ஆர்சிபி அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோலி பொறுப்பேற்க வேண்டும். எட்டு வருடங்களாக விளையாடியும் ஐபிஎல் கோப்பையை அவரால் பெற்றுத் தர முடியவில்லை. எட்டு வருடங்கள் என்பது நீண்ட காலம். வேறு எந்த கேப்டனாவது எட்டு வருடங்கள் விளையாடி கோப்பையைப் பெற்றுத் தராமல் இருந்திருந்தால் அவரால் அதே அணியில் கேப்டனாக இருந்திருக்க முடியுமா? எனவே இதற்கு கோலி பொறுப்பேற்க வேண்டும். ஒரு வருடம் மட்டும் சரியாக விளையாடவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் நடந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்
undefined
தோனியும் ரோகித் சர்மாவும் தங்கள் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்ததாலேயே கேப்டனாக நீண்ட காலம் நீடிக்க முடிந்திருக்கிிறது என்றும் கம்பீர் கூறினார். பஞ்சாப் அணிக்கு அஸ்வின் 2 ஆண்டுகள் தலைமை வகித்து எதுவும் சாதிக்காத நிலையில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கம்பீர் குறிப்பிட்டார்
undefined
என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது என்று கம்பிர் கூறியது குறிப்பிடத்தக்கது
undefined
பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றுள்ளதே தவிர ஒரு முறையும் கோப்பையை உச்சிமுகர்ந்ததில்லை. கடந்த ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது
undefined
click me!