ஐபிஎல் 2020: ரெய்னா கம்பேக்.. சிஎஸ்கே அணியில் இணைகிறார்..?

First Published Sep 27, 2020, 6:25 PM IST

ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்திருக்கும் நிலையில், சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைவது குறித்து சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ராயுடுவின் புண்ணியத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளிலும் தோற்றது.
undefined
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அம்பாதி ராயுடுவின் புண்ணியத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அவர் ஆடாத அடுத்த 2 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டமுடியாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
இந்த சீசனில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரெய்னா ஆடாதது, சிஎஸ்கே அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா ஆடாததன் விளைவு, சிஎஸ்கே போட்டி முடிவுகளில் எதிரொலிக்கிறது.
undefined
சிஎஸ்கேவின் தொடர் படுதோல்விகளின் விளைவாக, ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துவருகின்றனர்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே அணி ரெய்னாவை மிஸ் செய்கிறது என்ற எதார்த்தத்தை தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டார்.
undefined
ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணையவேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள காசி விஸ்வநாதன், ரெய்னாவை மீண்டும் அழைப்பது குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை. அவராகத்தான் ஒதுங்கினார்; அவரது முடிவுக்கு மதிப்பளிக்கிறோம். அதனால் நாங்கள் ரெய்னாவை மீண்டும் அழைப்பது குறித்து யோசிக்கக்கூட இல்லை. சரிவிலிருந்து சிஎஸ்கே மீண்டெழுந்து அசத்தும் என ரசிகர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். சில நல்ல ஆட்டங்களும் சில மோசமான ஆட்டங்களும் அமைவது இயல்புதான். அதிலிருந்து மீண்டெழுவது எப்படி என்பது அணிக்கு தெரியும் என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
undefined
click me!