நடனமாடி கொண்டிருந்த இளைஞருக்கு திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்.!

Published : Sep 21, 2023, 02:40 PM IST

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடனமாடி கொண்டிருந்த பிரசாத்(27) என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
நடனமாடி கொண்டிருந்த இளைஞருக்கு திடீர் மாரடைப்பு..  சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்.!

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பழக்கம், வேலை பளு உள்ளிட்டவறை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் இளம் வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் குறித்து ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. 

23

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் பகுதியில் விநாயகர் சிலை வைத்து மூன்று நாட்களாக அப்பகுதி மக்கள் பூஜை செய்து கொண்டு நடமாடிக்கொண்டிருந்தனர். நேற்று இரவு விநாயகர் மண்டபம் முன்பு சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள் பிரசாத்(27) நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென சுருண்டு கீழே விழுந்தார். 

33

இதனை கண்டு அதிர்ச்சி அவரது நண்பர்கள் உடனே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

click me!

Recommended Stories