டாடா விலங்குகள் மீது கொண்டுள்ள அன்பு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மேலாளர் ஒருவர் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். அதாவது லண்டனில் இளவரசர் சார்லஸ் முன்னிலையில் சிறந்த மனிதநேயமிக்கவர் என்ற விருது டாட்டாவிற்கு வழங்கப்பட இருந்திருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்த விழா நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னால் டாட்டாவின் மேலாளர் லண்டனுக்கு சென்றிருக்கிறார்.
திடீரென டாடா தன்னால் அந்த விழாவில் பங்கேற்க முடியாது என்று மேலாளரிடம் சொல்ல, இங்கிலாந்து இளவரசர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு என்ன பிரச்சனை என்று பயந்துபோய் டாட்டாவிடம் ஏன் வரமுடியாது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னுடைய செல்ல நாய்க்கு உடம்பு சரியில்லை, அதை தனியே விட்டு என்னால் வரமுடியாது முடியாது என்று கூறினாராம். இதை இலவச சார்லஸிடம் மேலாளர் கூறிய பொழுது, இந்த விஷயத்திற்காக தான் அவருக்கு சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்கின்ற விருதை வழங்க ஆசைப்படுகிறோம் என்று கூறி மகிழ்ச்சியோடு அவரது மேலாளரிடம் பரிசை கொடுத்து அனுப்பினாராம்.