அரசியல் எதிர்வினைகள்:
சித்திக் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் தோழமையைப் பேணி வந்தார். இதனால், அவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த அரசியல்வாதிகள் மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தினர். சிவசேனா-உத்தவ் பிரிவு எம்பி பிரியங்கா சதுர்வேதி, பாபா சித்திக் கொலை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பாபா சித்திக் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து, மகாராஷ்டிர அரசை விமர்சித்துள்ளனர்.
பாபா சித்திக் படுகொலை மகாராஷ்டிராவைத் தாண்டியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி பாபா சித்திக் படுகொலை குறித்து கவலை தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் கண்டன குரல் எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்சிபியின் தேசிய தலைவருமான அஜித் பவார், இன்று அமராவதியில் நடைபெறவிருந்த தனது ஜன்சன்மன் யாத்திரையை ரத்து செய்தார்.