நெடுந்தூர ரயில்களில் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, டிக்கெட் எடுப்பது கடினமான பணி. இந்த பிரச்சனைக்கு சில தீர்வுகளை வழங்க, ரயில்வேயின் விகல்ப் (VIKALP) திட்டம் உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இந்திய ரயில்வே பயணிகளுக்கு விருப்பத் திட்டத்தை வழங்குகிறது. இது உறுதியான டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ரயில்வேயின் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.