மண்ணில் மூழ்கிய மனித உயிர்கள்
முண்டக்காய், சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய கிராமங்களில் காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு சகதியாக வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரும், பெரிய பெரிய பாறைகளும் மனித உயிர்களை சிதைத்துள்ளது. பல இடங்களில் மனித உடல்களின் பாகங்கள் பாதி, பாதியாகவே மீட்கப்படுகிறது. யாருடைய உடல் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் உடல்கள் உருக்குலைந்து காணப்படுகிறது.