
செவ்வாய்க்கிழமை அன்று, கள்ளாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் மண் மற்றும் கான்கிரீட் சரிந்து விழுந்தது. இடிபாடுகள் ஒரு டேங்கர் லாரியை இழுத்துச் சென்றன. ஒரு பெண்மணியை ஒருவர் இழுத்து காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து சரியும் அந்தவாகனம், சிதறி ஓடும் மக்கள் என அந்த வீடியோ காட்சிகள் பதறவைக்கின்றன.
BREAKING NEWS- A landslide at the Kalladi tunnel work site in #Wayanad blocked the road and injured 5 people. They have been taken to the hospital. No deaths have been reported. Work at the site had already been stopped because of heavy rain. The area received 265 mm of rain in… pic.twitter.com/AEw4jaRPeG
— Siraj Noorani (@sirajnoorani) July 7, 2026
உயிரிழந்த 4 பேரும் வெளிமாநில தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. மோசமான வானிலையிலும் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.
ஹிரா குமார் (32), திலீப் (19), சூரஜ் யாதவ் (25), சஞ்சய் தாக்கூர் (35), ரஜ்னீஷ் (27), தன்மய் கோஷ் (28), கூப்பமால் (ஜெயா) (37), குஞ்சு (39) மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Video of Terrifying Moment of Landslide hits Wayanad, 3 dead, 9 injured
A major #Landslide triggered by continuous heavy rainfall struck #Kalladi near Meppady in #Wayanad district, #Kerala on Tuesday, 3 people feared died, while 9 others injured, one of them critical.
The… pic.twitter.com/Jl8C9QpaNu— Surya Reddy (@jsuryareddy) July 7, 2026
நிலச்சரிவால் ஒரு வீடு மற்றும் அருகிலிருந்த தேவாலயம் முற்றிலும் சேதமடைந்தது. பல வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
உள்ளூர் மக்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தொடர் மழை, நிலையற்ற நிலப்பகுதி மற்றும் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஆகியவற்றால் பணிகள் கடினமாகியுள்ளன.
மீனங்காடியில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. கோழிக்கோட்டில் இருந்தும் மற்றொரு NDRF குழு மீட்புப் பணிகளை பலப்படுத்த அனுப்பப்பட்டுள்ளது.
Kerala Landslide Update- Following the #Wayanad landslide, the Chief Minister held an emergency meeting with Minister T. Siddique and ordered immediate coordination of rescue operations. Revenue Minister A.P. Anil Kumar and Minister T. Siddique have been directed to reach… pic.twitter.com/O8xgrnPLpU
— Siraj Noorani (@sirajnoorani) July 7, 2026
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் காயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வயநாடு VIMS மருத்துவமனையில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவசர சேவைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, காயமடைந்தவர்களின் நிலையை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
கேரள முதல்வர் வி.டி. சதீசன், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை நடத்தினார். வயநாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார் மற்றும் வயநாடு அமைச்சர் டி. சித்திக் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். முதல்வர் வயநாடு மாவட்ட ஆட்சியரிடமும் பேசி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார்.
Following the #Wayanad landslide, the Chief Minister held an emergency meeting with Minister T. Siddique and ordered immediate coordination of rescue operations. Revenue Minister A.P. Anil Kumar and Minister T. Siddique have been directed to reach Wayanad. #NDRF teams from… pic.twitter.com/OwHRh2gLhV
— Mohammed Faizan Shaikh (@king7851007) July 7, 2026
சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இணைந்து மீட்புப் பணிகளை தாமதமின்றி தொடர வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த நிலச்சரிவு துயரம் நிகழ்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து, மிக அதிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. கண்ணூர், காசர்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
A landslide has been reported at Kalladi in #Wayanad following continuous heavy rainfall. The incident occurred near Meenakshi Bridge at the Anakkampoyil - Kalladi - Meppadi tunnel road construction site. At least five people have been injured, while authorities fear that several… pic.twitter.com/oKsVGSXHD8
— Harish M (@chnmharish) July 7, 2026
வானிலை ஆய்வுத் துறையின்படி, அடுத்த சில நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மழை தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த வார இறுதியில் (ஜூலை 10-11) மழையின் தீவிரம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.