அந்தக் கடத்தல் கும்பல், ஓட்டுநர் மற்றும் பிற ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து, ரயிலை வேறு நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மிரட்டினார்கள். தனது தந்தை உபேந்திராவை விடுவிப்பதற்காக, ஒரு பிரபல ரவுடி கும்பலின் மகனால் ரயில் கடத்தப்பட்டது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட உபேந்திராவின் மகன் பிரிதம் சிங் என்கிற ராஜேஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த ரயில் கடத்தலை மேற்கொண்டார்.
அதாவது பல்வேறு வழக்குகளில் உபேந்திரா சிங் பிலாஸ்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு குற்றவியல் வழக்கு விசாரணைக்காக உபேந்திரா துர்க் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற விசாரணை முடிந்ததும், போலீசார் உபேந்திராவை அதே ரயிலில் பிலாஸ்பூருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.