குடும்பத்தினர் எதிர்த்தாலும், இந்த காதலர்கள் ஒன்று சேர கேரளாவின் ஆளும் கட்சித் தலைவர்கள் உதவி செய்தனர். அருமானூர் கோயிலில் நடந்த திருமணத்தில், சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், அமைச்சர் வி. சிவன்குட்டி, ராஜ்யசபா எம்.பி. ஏ.ஏ. ரஹீம் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தினர். கும்பமேளாவில் வைரலான இந்த பெண், சரியாக கும்ப மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டது இந்த திருமணத்தின் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகப் பார்க்கப்பட்டது.
இதுதான் உண்மையான 'கேரள ஸ்டோரி'
திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஏ.ஏ. ரஹீம், "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள், அந்த சொர்க்கமே இந்த கேரளா தான். யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அப்படிப்பட்ட சுதந்திரம் கேரளாவில் மட்டுமே சாத்தியம். இந்த ஜோடியை வாழ்த்துவதற்காக சிபிஎம் இங்கு வந்துள்ளது" என்றார். அப்போது பேசிய அமைச்சர் வி. சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரள ஸ்டோரி" என்று குறிப்பிட்டார்.