இந்தியாவின் 5 சக்திவாய்ந்த ஏவுகணைகள்!!

Published : May 09, 2025, 05:06 PM IST

இந்தியா வலிமையான ராணுவத்திற்கு மேலாக, ஊடுருவ முடியாத ஆயுதசக்தி பலத்தையும் கொண்டுள்ளது. எதிரி நாடுகளை நிமிடங்களில் அழிக்கக்கூடிய ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன. பாகிஸ்தானை அடக்க இந்த ஐந்து ஏவுகணைகள் போதுமானவை. எதிரி நாடுகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிடம் உள்ள அந்த ஐந்து ஏவுகணைகள் என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்.   

PREV
16
இந்தியாவின் 5 சக்திவாய்ந்த ஏவுகணைகள்!!
5 powerful Indian missiles that threaten Pakistan:

சமீபத்திய ஆபரேஷன் சிந்துர் மூலம் இந்தியா தனது அதிநவீன ஏவுகணை சக்தியை மேலும் வலுவாக வெளிப்படுத்தியுள்ளது. பிரம்மோஸ் முதல் அக்னி வரை, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஐந்து ஏவுகணைகளும் எதிரி நாடுகளுக்கு எதிரான விரைவான மற்றும் துல்லியமான பதிலடிக்கு தயாராக உள்ளன. சில நிமிடங்களில் எதிரி தளங்களை தரைமட்டமாக்கும் திறன் கொண்டவை. பாகிஸ்தானை அடக்கும் 5 ஏவுகணைகளின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம். 

26
1. BrahMos - சூப்பர்சோனிக் கேம் சேஞ்சர்

இந்தியா-ரஷ்யா கூட்டாக உருவாக்கிய பிரம்மோஸ், உலகின் அதிவேக பயண ஏவுகணை. இது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணித்து, 400 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும். இதன் தொழில்நுட்பம் எதிரி பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவ உதவுகிறது.

36
Agni V - இந்தியாவின் நீண்ட தூர ஏவுகணை

அக்னி தொடரில் அக்னி-V விண்வெளி ஏவுகணை. இது 5,000 கி.மீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஏவுகணைகள் வழக்கமான அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

46
‘பிரளய்’ ஏவுகணை

‘பிரளய் என்பது சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை. இது 500 கி.மீ தொலைவில் உள்ள எதிரி தளங்களை விரைவாகவும் துல்லியமாகவும் தாக்கும். இது மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்படுகிறது ‘பிரளய்’ ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களை சுமந்து சென்று துல்லியமாக தாக்க வல்லது. இது தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் இருக்கும் மற்றொரு இலக்கை சில நிமிடங்களில் அழிக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஆகும். 'பிரித்வி' ஏவுகணையை முன்மாதிரியாக கொண்டு தயாரிக்கப்பட்டது இது.. 

56
நிர்பய் - ரேடாரில் சிக்காத ஏவுகணை

நிர்பய் என்பது சப்சோனிக் பயண ஏவுகணை. இது குறைந்த உயரத்தில் பறந்து, 1,000 கி.மீ தூரம் வரை இலக்கை தாக்கும். இது எதிரி நாட்டின் இலக்குகளை தாக்க ஏற்றது.

66
சௌர்யா - ஹைப்பர்சோனிக் ஏவுகணை

சௌர்யா ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் ஏவுகணை. இது கேனிஸ்டர் மூலம் ஏவப்படும். இது 700 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும். இதைக் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம்.

ஆபரேஷன் சிந்துர் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பில் எவ்வளவு தயாராக உள்ளது என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது. எதிரி நாடுகளுக்கு எதிரான விரைவான பதிலடி நடவடிக்கைகளில் இந்த ஆயுதங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories