கூட்ட நெரிசல் குறையுமா.?
சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் வாராந்திர ரயில், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-ஆலப்புலா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி எண்ணிக்கையில் ஒன்றை குறைத்து, முன்பதிவில்லா பெட்டியை அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. வரும் நாட்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை அனைத்து ரயில்களிலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயல்வே துறையின் இந்த முடிவால் கூட்ட நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் அதிகரிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்யலாமல் சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.