இந்திய குடும்பங்களில் பெற்றோர்–பிள்ளைகள் உறவு மிகவும் நெருக்கமானது. பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்ற பிறகு, அவர்களுக்கு பெற்றோர் தொடர்ந்து உதவி செய்வது சாதாரணமாக பார்க்கப்படுகிறது. பலர் தங்களது ஆசைகள், கனவுகள் அனைத்தையும் தியாகம் செய்து, “நாம் சந்தித்த கஷ்டம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக, கடன் எடுத்து கூட பெரிய வீடு கட்டி, அதை பிள்ளைகளுக்காக சேமித்து வைப்பதும் வழக்கமாக உள்ளது.