இந்த ரயில் கடந்த 29 ஆண்டுகளாக இந்த இரண்டு புனித தலங்களுக்கும் இடையே சீக்கிய பக்தர்கள் மற்றும் பிற பயணிகளை ஏற்றிச் செல்கிறது. பயணம் முழுவதும் இலவசமாக உணவு வழங்குகிறது. மற்ற ரயில்களில் பயணிகள் உணவுக்காக பணம் செலுத்த வேண்டும். ஆனால், சச்கண்ட் எக்ஸ்பிரஸில் இந்த சேவை முற்றிலும் இலவசம்.
சச்கண்ட் எக்ஸ்பிரஸ் சுமார் 33 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2,000 கி.மீ தூரத்தைக் கடக்கிறது. இந்த பயணத்தின்போது 39 ரயில் நிலையங்களில் நிற்கும். பயணத்தின்போது, 6 முக்கிய ஸ்டேஷன்களில் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஸ்டேஷன்களில் புது டெல்லி, போபால், பர்பானி, ஜல்னா, அவுரங்காபாத் மற்றும் மராத்வாடா ஆகியவை அடங்கும். பயணிகள் நிதானமாக சாப்பிடும் வகையில் ரயிலின் நேரம் திட்டமிடப்பட்டுள்ளது.