கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி!

Published : Nov 17, 2024, 07:33 PM ISTUpdated : Nov 17, 2024, 07:35 PM IST

உத்தர பிரதேசத்தில் ஆட்டோவில் பயணித்த புதுமணத் தம்பதிகள் உட்பட 6 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். கார் மோதியதில் ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

PREV
14
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி!
Celebrity Marriage

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் தாம்பூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமணத் தம்பதி உள்ளிட்ட 6 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

24

இந்த வாகனம் தாம்பூர் அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னே சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றது. எதிர்பாராத விதமாக கார் ஆட்டோவின் பின்பக்கம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மின் கம்பத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. 

34

இதில், உள்ளே இருந்த புதுமண தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும்  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

44

மேலும் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories