முகூர்த்த நேரம் நெருங்கியதால், அந்த நேரத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என இரு வீட்டாரும் மணமகனிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து ஆவணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசித்த போது அவர்களும் அதற்கு சம்மதித்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் வைத்து குறிப்பிட்ட முகூர்த்தத்திலேயே ஆவணிக்கு ஷாரோன் தாலி கட்டினார். இருப்பினும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் தடபுடலாக விருந்து உபசரித்து அனுப்பினர்.