பிரியங்கா காந்தியும் இந்திய அரசியலும்
கடந்த 1999ம் ஆண்டு முதல், அதாவது தனது 27வது வயது முதல் தனது தாய் சோனியா காந்திக்காக அவர் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் பிரியங்கா காந்தி கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) கிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கான பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக இணைந்து தீவிர அரசியலில் நுழைந்தார்.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை புத்துயிர் பெறு வைப்பதில் கவனம் செலுத்தி, 2019 பொதுத் தேர்தலில் பிரியங்கா காந்தி வதேரா குறிப்பிடத்தக்க பங்கைக் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பெண்கள் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி காங்கிரஸின் முயற்சிகளை பிரியங்கா காந்தி தீவிரமாக வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸின் தலைமை மற்றும் வியூகங்களில், குறிப்பாக வட இந்திய அரசியலில் பிரியங்கா ஒரு முக்கிய நபராக இருக்கிறார்.