அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழு டெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் இரண்டு நாள் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நாளில், டிரம்ப் - மோடி இடையேயான இந்தத் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தத்திற்காக இந்தியா இதுவரை கண்டிராத மிக வலிமையான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாக செனட் சபையில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க இறைச்சி மற்றும் பால் பொருட்களை இந்தியச் சந்தைக்குள் அனுமதிப்பது என்பது பெரும் சிக்கலாகவே நீடிப்பதாகவும் அவர் கூறினார்.
மோடி அரசாங்கத்தின் சமீபத்திய அணுகுமுறை இதுவரை கண்டிராதது என்றும் மிகச் சிறந்த அணுகுமுறை என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் செனட் சபையில் தெரிவித்துள்ளார்.