உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. தேர்தல் ஆண்டில், தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று அதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது, சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் வழங்கிய உத்தரவு ஆகியவை கவனிக்கப்பட்டன. இவரது தலைநீதிபதி பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிவடைகிறது.