தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) வலியுறுத்தும் மன அழுத்தமில்லாத மற்றும் மகிழ்ச்சியான கற்றல் என்ற கருத்தை 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி ஆதரிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம், மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக, சிந்தித்து, புரிந்து, உண்மையான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்துப் பேசுகிறார். நேர மேலாண்மை, அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பது, மன அழுத்தத்தை சமாளிப்பது, கவனச்சிதறலைத் தவிர்ப்பது, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது போன்றவை குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.