கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகள் நள்ளிரவுக்குப் பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கின. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஏப்ரல் 22 படுகொலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு காஷ்மீர் குதிரை சவாரி நடத்துநரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
24
Operation Sindoor - பாரதத்தின் பதில்
பஹல்காமில் நடந்த கொடூரமான கொலைகளுக்கு இந்த இராணுவ நடவடிக்கை "பாரதத்தின் பதில்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில், நாட்டின் ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுவதாகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
34
Operation Sindoor - தகுந்த பதிலடி
"நமது ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுகிறோம். பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதில் நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர் ஆகும். இந்தியா மற்றும் அதன் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க மோடி அரசாங்கம் உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்து ஒழிப்பதில் பாரதம் உறுதியாக உள்ளது," என்று திரு. ஷா கூறினார்.
லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஹாஜிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களால் பயன்படுத்தப்படும் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள ஒன்பது தளங்கள் மீது முப்படைகளின் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.