திருப்பதி கோவிலில் இனி இந்துக்களுக்கு மட்டுமே வேலை! முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!

திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

Only Hindus work in Tirupati temple! CM Chandrababu Naidu tvk
chandrababu Naidu

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.

Only Hindus work in Tirupati temple! CM Chandrababu Naidu tvk
tirupati temple

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு:  திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். 

இதையும் படிங்க: 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பள்ளி வேலை நேரம் மாற்றம்!


tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள ஏழுமலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது. அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. கோயில் அமைந்துள்ள மலைகளில் வணிக நோக்கத்துடன் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. இந்த பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

CM chandrababu Naidu

மேலும் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகிறார்கள். 24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே என்றார். 

Latest Videos

vuukle one pixel image
click me!