100 யூனிட் இல்ல 300 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமா? இதை செய்தாலே போதும் - அரசின் அசத்தல் அறிவிப்பு

பிரதமர் சூரியர் கர் முஃபத் பிஜ்லி யோஜனா திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு, அரசு மானியம் வழங்கும், மேலும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்.

Free Electricity Modi Government New Solar Panel Scheme vel

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் அவ்வபோது பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டும் வருகின்றன.

Free Electricity Modi Government New Solar Panel Scheme vel

சில நேரங்களில் அரசு மக்களுக்கு நிதி உதவி செய்கிறது, சில நேரங்களில் மருத்துவச் செலவுகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்குகிறது.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணமாகப் பெரிய தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதிலிருந்து அரசு விடுதலை அளிக்கவுள்ளது. இப்போது நாட்டு மக்களுக்காக ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது மோடி அரசு. ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பிஎம் சூரிய கர் முஃபத் பிஜ்லி யோஜனா தொடங்கப்படுகிறது. இதன் கீழ், வாடிக்கையாளர்களின் வீட்டின் கூரையில் சோலார் பேனல் நிறுவப்படும். இதை நிறுவ அரசு 30 ஆயிரம் முதல் 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கும். இதை நிறுவுவதால் மின் கட்டணம் வராது.

தற்போது மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் அனைவருக்கும் அதிக செலவாகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க இலக்கு வைத்துள்ளோம் என்று மோடி கூறியுள்ளார்.

2026-27 ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தில் 75,021 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அறியப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணைய விரும்பினால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் சுமார் 300 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!