உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. உஞ்சி டன்கவுர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், தனது கோட்டக் மஹிந்திரா வங்கிக் கணக்கைப் பரிசோதித்தபோது, 11.13 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தத் தொகை, அவரை உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக மாற்றும் அளவுக்கானது.
ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமை அன்று தீபக்கிற்கு வந்த குறுஞ்செய்தியின்படி, அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட மொத்தத் தொகை, ரூ. 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299. இது கற்பனைக்கும் எட்டாத ஒரு மிகப்பெரிய தொகை. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வேலையில்லாத தீபக், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த வங்கிக் கணக்கைத் தொடங்கினார்.