Marriage Couple: பெங்களூரில், திருமணமான ஒரு மாதமாகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவரை மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மன அழுத்தம் என மருத்துவர் கூறியும் கணவர் விலகியே இருந்ததால், ஆத்திரமடைந்த மனைவியின் உறவினர்கள் கணவரைத் தாக்கினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் கோவிந்தராஜ் பகுதியில் வசித்து வந்த பிரபு- சாதானா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மே மாதம் 5ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரபு தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
24
விரக்தி அடைந்த மனைவி
இதனால் விரக்தி அடைந்த மனைவி தனது கணவரை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், கணவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் தவிர்த்து வந்துள்ளார். பின்னர் மருத்துவர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரபுக்கு அறிவுரை வழங்கினார். அப்படி இருந்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதனால் மனைவி பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
34
காவல் நிலையத்தில் புகார்
இதனால் பொறுமை இழந்த மனைவி சதானா வேறு வழியில்லாமல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் பிரபுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரபு கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மனைவி என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்புவதாகவும் கூறினார். உறவினர்களை வரவழைத்து என்னை தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சாதனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சாதனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார் என தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி என்னை வீடு புகுந்து அடித்ததோடு, வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே அள்ளி போட்டனர். என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.