தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி:
வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுகளுக்கு முன்பாக, அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை இருந்தால், 18-வது சுற்று முடிவடைந்தவுடன் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.
அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளின் அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்க வேண்டும்.
மேலும், நிராகரிக்கப்பட்ட அஞ்சல் வாக்குகளைக் கட்டாயமாக மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.