பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண், கணவரின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மனமுடைந்து இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர். ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் கல்லூரி படிக்கும் போது பத்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பத்மா வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெற்றோர் எதிர்ப்பை மீறி 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5) இரண்டு மகள்கள் உள்ளனர்.
25
கணவன் மனைவிக்கு இடையே தகராறு
இந்நிலையில் சிவசங்கர் திருமணமானதில் இருந்து சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களின் கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் குடும்ப செலவுக்கு கூட கணவர் பணம் தராததால் பத்மா இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
35
குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை
இதனிடையே பத்மா, மகளிர் குழுவில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் மற்ற குழு உறுப்பினர்கள் அவரை அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா நேற்று முன்தினம் மாலை தனது இரண்டு மகள்களை தூக்குப்போட்டு கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். வேலையில் சென்ற கணவர் சிவசங்கர் வீட்டுக்கு வந்து பார்த்த போது குழந்தைகள் மற்றும் மனைவி தூக்கிட்டு தொங்கியதை பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பத்மா தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனது நிலை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பாடம்.
55
பத்மா பரபரப்பு கடிதம்
எனது கணவரை காதலித்து திருமணம் செய்த பாவத்திற்காக, நான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறேன். என் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக, என் குழந்தைகளும் அதே கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். இதனால் நாங்கள் விடைபெறுகிறோம். நீ எப்படியும் மறுபடியும் வேறு கல்யாணம் செய்வாய். இந்த முறையாவது, நீ வாழ்க்கையில செட்டிலாயிட்ட பிறகு அதைச்செய். என்னைப்போல இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நாசமாக்காதே. இன்னொரு ஜென்மத்திலாவது, என் பெற்றோர் பார்க்கும் உறவுடன் என் குடும்பத்தோட வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.