மேலும், தற்போதைய உலக அரசியல் ஒரே மையத்தைச் சுற்றி இயங்கவில்லை என்றும், இது கூட்டணி அரசியல் போன்றது என்றும் ஜெய்சங்கர் கூறினார். எந்த நாடும் முழுமையான ஆதிக்கம் செலுத்தாத இந்த பலதரப்பு உலகில், இந்தியா தனது தேசிய நலனை மட்டுமே மையமாக வைத்து நெகிழ்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை சமநிலைப்படுத்துவது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் “முதலில் உதவும் நாடாக” செயல்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.
இறுதியாக, உலக அரங்கில் மௌனம் ஆபத்தானது என்றும், தேவையான நேரத்தில் இந்தியா தனது குரலை உயர்த்த வேண்டும் என்றும் ஜெய்ஷங்கர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், எப்போது பேச வேண்டும், எப்போது பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதே உண்மையான தூதரக நுண்ணறிவு என்றும் அவர் கூறினார்.