முதலில் திட்டமிடப்பட்ட பாதையில், சூரத், நாசிக், அகமதுநகர், சோலாப்பூர், கலபுரகி, கர்னூல், கடப்பா, திருப்பதி போன்ற நகரங்கள் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன. புதிய திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் சம்ருத்தி எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள பார்வீர் குர்த் முதல் NH-48 (மும்பை–அகமதாபாத் சாலை)யில் உள்ள தவா கிராமம் வரை ஒரு புதிய கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை அமைக்கப்படும். இதை மாநில MSRDC (மகாராஷ்டிரா சாலை மேம்பாட்டு கழகம்) நிர்மாணிக்க உள்ளது.