ரயில்வே விதிகளின்படி, உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், மொத்தத் தொகையில் 25% வரை பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை கிடைக்கும்.
ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் பாதித் தொகை, அதாவது 50% கழிக்கப்படும். மீதி திரும்பத் தரப்படும்.