ரயில்வே போலீசாருக்கு வழிகாட்டு நெறிமுறை
டிக்கெட் விற்பனையில் சட்டவிரோத நடவடிக்கைகள் உண்மையான பயணிகளுக்கு சம உரிமையுடன் பயணசீட்டுகளை அணுகுவதில் தடையையும், ரெயில்வே துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கின்றன. இதற்கு பதிலளிக்க, ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) இந்த சிக்கலை தீர்க்கவும், ரெயில்வே சேவைகளை சீரான முறையில் அனைவருக்கும் வழங்கவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் திடீர் அதிரடி நடவடிக்கைகள், டிஜிட்டல் கண்காணிப்பின் படி மொத்தமாக முன்பதிவு செய்வதை முறையற்ற பண பரிவர்த்தனை மேலும் டிக்கெட் கவுண்டர்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.