ஆரம்பமே அமர்க்களம்.. சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அதிவேக ரயில் பாதை

Published : Feb 01, 2026, 12:10 PM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சென்னை-ஐதராபாத் உள்ளிட்ட 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.

PREV
13

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 10 பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா சீதாராமன் நெருங்கி வருகிறார்,

23

பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு அதிரடி சரவெடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அதாவது நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னை – ஐதராபாத், பெங்களூரு – சென்னை, புனே – ஐதராபாத், மும்பை - புனே, டெல்லி – வாரணாசி, வாரணாசி – சிலிகுரி , ஐதராபாத் – பெங்களூரு உள்ளிட்ட அதிவேக ரயில் சேவைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

33

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும். ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம். 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத்தின் ஜாம்நகரில் அமைக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories