குளு குளுவென மாறிய டெல்லி
கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இந்த திடீர் மழையால் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, டெல்லியில் நாளை வரை இடி மற்றும் பலத்த காற்று கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.