பேரிடர் எச்சரிக்கை.. கடலோர மக்கள் ஜாக்கிரதை
வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தின் அனைத்து 14 மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சூர், பாலக்காடு, கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்கரையோர மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.