கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, நௌகாமா காப் கட்டுப்பாட்டில் உள்ள 21 கிராமங்களில் காதல் திருமணமோ, லிவ்-இன் உறவுகளோ, வரதட்சணையோ ஏற்றுக்கொள்ளப்படாது. அதுமட்டுமல்லாமல், 'கன் கல்ச்சர்' எனப்படும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கும், ஆபாசமான விஷயங்களுக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆதரவைத் திரட்டவும் 21 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு உறுப்பினர்கள், காப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள குடும்பங்களிடமும் மக்களிடமும் பேசி, இந்தத் தீர்மானங்களை விளக்கி ஆதரவு கேட்பார்கள்.