பத்ரா எம்எல்ஏ சைதன்யசின் ஜாலா சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். விபத்துக்களைத் தடுக்க அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பாலம், மத்திய குஜராத்தை சௌராஷ்டிராவுடன் இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடத்தில் உள்ளது. இது ஆனந்த், வதோதரா, பரூச் மற்றும் அங்கலேஸ்வர் இடையே பயணிப்பவர்களுக்கு மிகவும் அவசிய பாதையாகும். ஆனால் இந்த பாலம் நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.