ஜோஷிமத், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப் மற்றும் சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி ஆகிய புகழ்பெற்ற புனித யாத்திரைகளுக்கான நுழைவாயில், நிலச் சரிவு, நில விரிசல், பூமிக்குள் நிலம் சிறிது சிறிதாக மூழ்குதால் போன்ற காரணங்களால் சவாலை எதிர்கொண்டுள்ளது. நகரில் வசிக்கும் 169 குடும்பங்கள் இதுவரை நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜோஷிர்மத் முழுவதும் நிலத்திற்குள் புதைந்துவிடும் என்ற சமீபத்திய இஸ்ரோ தகவல்கள் மனதை கலங்க வைக்கிறது. புனித ஸ்தலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் பக்தர்களும் கலங்கியுள்ளனர். இந்த சம்பவங்களுக்குப் பின்னர் ஜோஷிமத் பகுதியில் எந்த கட்டிடங்களும் எழுப்பக் கூடாது என்று உச்சநீதிமன்றமும் கண்டித்துள்ளது.