சுந்தரவனக் காடுகள், காசிரங்கா தேசியப் பூங்கா முதலிய தேசிய பூங்காக்கள், நினைவுச் சின்னங்கள் என 50 சுற்றுலாத் தலங்கள் வழியாகச் செல்ல இருக்கிறது. இந்த சொகுசு கப்பலில் ஜனவரி 13ஆம் தேதி வாரணாசியில் புறப்படும் இந்தக் கப்பல் பக்ஸர், ராம்நகர், காஜிப்பூர் வழியாக 8வது நாள் பாட்னாவை அடையும். அங்கிருந்து கிளம்பி 20வது நாள் மேற்கு வங்க மாநிலத்தில் பராக்கா, முர்சிதாபாத் வழியாக கொல்கத்தா செல்லும்.