தெரு நாய்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்படுத்திய சலசலப்புக்கு மத்தியில், நாய் பிரியர்களுக்கு இப்போது மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. நீங்கள் ஒரு நாயை வைத்து, அதை கயிறு, காலர் இல்லாமல் வாக்கிங் அழைத்துச் சென்றால், அது உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்திற்கு வேட்டு வைக்கும்.
மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் பொது அறக்கட்டளை திருத்தம் மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி இரும்புச் சங்கிலி, காலர் இல்லாமல் பொது இடத்தில் நாயை அழைத்துச் சென்றால் அபராதம் ரூ.50 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.