இந்நிலையில், ஒரு தடவையாவது காசிக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு உதவ வரும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் இயக்கப்படும் இந்த ரயில் நவம்பர் 9ஆம் தேதி தென்காசியில் இருந்து புறப்படும். மதியம் 3.50 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை வந்தடையும்.