இந்தியாவில் தங்க அனுமதி
மினலின் வழக்கறிஞர், மினல் கான் நீண்ட கால விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார். இதற்கிடையில், ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் குடிமக்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பச் சொல்லப்பட்டது. இதனால், அட்டாரி-வாகா எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் மினல் கான். ஆனால், கடைசி நேரத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தியாவில் தங்க அனுமதி கிடைத்தது. தற்போது 10 நாட்களுக்கு அவருக்கு இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம்
இதற்கிடையில், முனீர் அகமது, கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, சிஆர்பிஎஃப்-இடம் இருந்து விடுப்பு பெற்றதாகத் தெரிவித்தார். மேலும், "முதலில், ஊடகச் செய்திகள் மூலம் எனது பணிநீக்கம் குறித்து அறிந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, சிஆர்பிஎஃப்-இடமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது, அதில் பணிநீக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், பாகிஸ்தான் பெண்ணை மணக்க தலைமையகத்திடம் அனுமதி கேட்டேன். அனுமதி கிடைத்தது'' என்றார்.