உத்தரபிரதேசத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பவுபோராவைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் (33). இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜிதேந்திர குமார் ஜோதியை 9 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி ஜோதி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார்.
24
காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஜிதேந்திர குமார் திடீரென வீட்டில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதுதொடர்பான மனைவி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜிதேந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது சகோதரர் சாவில் மர்மம் இருப்பதாக அஜய் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
34
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஜிதேந்திர குமார் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அடையாளங்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜோதியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தது மட்டுமல்லாமல் தடுமாறியுள்ளார்.
பின்னர் ஜிதேந்திர குமாரை ஜோதி அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதும் தெரிய வந்தது. அதிகளவில் பணத்தை சூதாட்டத்தில் இழந்ததால் ஜிதேந்திர குமாருக்கும் ஜோதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் நான்கு பேரும் சேர்ந்து ஜிதேந்திர குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக உடலை தூக்கில் கட்டி தொங்கவிட்டு ஜிதேந்திர குமார் தற்கொலை செய்ததாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜோதியின் குடும்பத்தையே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.