இந்த நிலையில் அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து கன்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளது. கொல்லம் கருநாகப்பள்ளி அருகே கடற்கரையில் இது நிகழ்ந்துள்ளது. கடல் கரையில் மோதி நிற்கும் நிலையில் கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் கொள்கலன் கரை ஒதுங்கியதால், அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காலியான கொள்கலன்தான் கரை ஒதுங்கியதாகக் கருதப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக ஆய்வு நடத்த முடியாத நிலை நீடிக்கிறது. மூழ்கிய கப்பலில் இருந்து வந்ததாகத் தோன்றும் எந்தப் பொருளையும் கடற்கரையில் கண்டால், தயவுசெய்து அதைத் தொடவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம்.