பஞ்சாப்பில் 1100 மகளிர் உரிமை தொகை
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி சப்வேவால் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து சப்பேவால் சட்டசபை தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் பகவந்த் மான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர்களுக்கு வழங்குவோம் என தெரிவித்தோம், எனவே 100 ரூபாய் அதிகரித்து மாதம் 1100 ரூபாய் வழங்குவோம் எனவும்,எங்களது அடுத்த திட்டம் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூபாய் 1,100 வழங்குவதே ஆகும் என முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்,