கர்நாடக மாநிலத்தில் இயற்கை அழகை ரசிக்க வந்த இடத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. குடகின் புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் சென்னை பெண் சுற்றுலா பயணி ஒருவர் சிக்கி உயிரிழந்தார். 33 வயதான ஜின்னு மேத்யூ என்ற அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதியம் சுமார் 12 மணியளவில், துபாரே முகாமில் யானைகளைக் குளிப்பாட்டும் நிகழ்வு நடந்தது.
அப்போது, 'மார்த்தாண்டா', 'கஞ்சன்' என்ற இரண்டு யானைகளை ஆற்றுக்குக் கொண்டு வந்தனர். பாகன் கௌஸ், மார்த்தாண்டா யானையை ஆற்றில் இறக்கியபோது, அது எதிர்பாராதவிதமாக கஞ்சன் யானை மீது மோதியதாகக் கூறப்படுகிறது. தன் மீது மார்த்தாண்டா மோதியதும், கஞ்சன் யானை கடும் கோபம் கொண்டது. உடனே அது மார்த்தாண்டாவைத் தாக்கப் பாய்ந்தது. இந்த திடீர் மோதலைப் பார்த்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர்.