உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சில நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் சாவடி வாரியான பட்டியல், சாவடி நிலை அலுவலர்கள் (Booth-Level Officer - BLO) மற்றும் பிளாக் டெவலப்மென்ட்/பஞ்சாயத்து அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தப்படும்.
இந்த விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளத்திலும், சமூக ஊடக பக்கங்களிலும் வெளியிடப்படும். இந்த விவரங்கள் செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் பரவலாக விளம்பரப்படுத்தப்படும்.
நீக்கப்பட்ட வாக்காளர்கள், தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக, ஆதார் அட்டையுடன் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.