நடிகர், நடிகைகள் போராட்டம்
கர்நாடக மாநிலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என வலியுறுத்து நடைபெறும் போராட்டத்தில் கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், திரைப்பட் மற்றும் நாடக நடிகர்கள் ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.