திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தை
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தரிசனம் செய்ய வருவார்கள். திருப்பதி வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நடைபயணமாக மலையேறுவார்கள். இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 3 வயது சிறுவன் தனது பொற்றோருடன் மலைப்பாதையில் நடந்து சென்ற போது சிறுத்தை கவ்வி பிடித்துச் சென்றது. இதனைப் பார்த்த பெற்றோர், பக்தர்கள் துரத்தியதால் மற்றும் வனத்துறையினர் விரட்டியதால் அச்சிறுவனை விட்டு விட்டு, சிறுத்தை தப்பி ஓடியது.