திருப்பதி- சிறுமியை கொன்ற சிறுத்தை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலும் இருந்து வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூன் 24-ம் தேதி, கர்னூலை சேர்ந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி பிடித்துச் சென்றது. இதனைப் பார்த்த பெற்றோர், பக்தர்கள் துரத்தியதால், அச்சிறுவனை விட்டு விட்டு, சிறுத்தை தப்பி ஓடி விட்டது.
இதனையடுத்து அடுத்த ஒரு வாரத்தில் கடந்த 11ஆம் தேதி பெற்றோர்களுக்கு சற்று முன்பாக அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற நெல்லூரை சேர்ந்தலக்ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களை அச்சத்தில் உலுக்கியது.இதன் காரணமாக நடைபாதை பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.