'டிஜிட்டல் கைது' மோசடிகளுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தியச் சட்டத்தின் கீழ் "டிஜிட்டல் கைது" என்று எந்தவொரு சட்டப்பூர்வ கருத்தும் இல்லை.
போலீசார் ஒருபோதும் வீடியோ அழைப்புகள் மூலம் கைது நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள். உண்மையான கைது என்றால், அதிகாரிகள் சரிபார்க்கக்கூடிய அதிகாரப்பூர்வ வாரண்ட்டுடன் நேரடியாக உங்கள் இருப்பிடத்திற்கு வருவார்கள்.
கைதைத் தவிர்க்க அல்லது குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய அபராதம், வைப்புத் தொகை என ஒருபோதும் பணம் கேட்க மாட்டார்கள்.
தெரியாத நபர் ஒருவர் அதிகாரி என்று கூறி அழைக்கும்போது, ஓ.டி.பி., பாஸ்வேர்டு, வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார், அல்லது பான் தகவல்களை பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.